பா.ம.க vs வீரப்பன் !!

இனமும் வனமும் சிதைந்த கதை என நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. நல்ல படப்பிடிப்பு, நடிகர் தேர்வு, உணர்ச்சி மயமான சம்பவங்கள் என சந்தனக் காடு பட்டையைக் கிளப்புகிறது.

இன்னொரு பக்கம் பா.ம.க வின் பத்திரிகைகளில் வீரப்பன் இன்னொரு தெய்வமாகவும்
மற்றவர்கள் மாபெரும் சாத்தான்களாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஈவு இரக்கமற்ற கொடுங்கோலின் உச்சமாக அவர்களால் சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையில் அத்தனை கொடூரமாக இருந்திருப்பார்களா இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம். எனினும் தவறிழைத்தவர் யாராய் இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல.

கடந்த வாரம் எதேச்சையாக பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரிடம் பத்திரிகைத் துறையில் சாதீயம், அரசியல் நோக்கு, சுயநல வெளிப்பாடு என பல விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது.

அவர் மிக மிக சாதாரணமாகச் சொன்ன ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் சொன்னது இது தான்.

“சும்மா இவர்கள் வீரப்பன் செய்திகளை போஸ்ட்மார்ட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தொலைக்காட்சியோ, பாமக பத்திரிகைகளோ இதை புனிதப்படுத்துவதன் காரணம் சாதி அரசியல் தான். வீரப்பனும் பா.ம.க முன்னிறுத்தும் சாதியும் ஒன்றே. அது தான் அனைத்துக்கும் பின்னணியில் இயங்கும் ஒரே காரணம்” என்றார் அவர்.

மிகவும் அதிர்ச்சியாக இருந்தது செய்தியைக் கேட்க !

அன்னிய மொழியை எதிர்க்கும் கட்சியில் எப்போதும்
வன்னிய மொழியே வாழ்கிறதோ ?

~ by nermai மேல் April 11, 2008.

2 பதில்கள் to “பா.ம.க vs வீரப்பன் !!”

  1. இவை அனைத்தும் பொய் எனில் காவல் துறை பார்த்துகொண்டு சும்ம இருக்காது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நேரில் விசாரித்து தொடரை எடுக்கிறார்கள் இதில் மூக்கை நுழைத்தால் அனைவரும் விசாரனைக்கமிசனில் சிக்கவேண்டியிருக்கும் என்பதர்க்காகவே காவல்துறையும் அமைதியாகவே இருக்கிறது. எணக்குத்தெறிந்தவரை அது அரசியலுக்காக செய்வதாக தெறியவில்லை எது நிஜம் என்று போகப் போகத் தெறியும்

  2. இது இவ்வளவு நாள் தெரியாதா..வீரப்பன் மனைவிக்கு சட்டமன்ற தேர்தல் இடம் கொடுப்பதாகக் கூட ஒரு சேதி வந்ததே…
    என்ன தான் தமிழன் தமிழன் என்றுச் சொன்னாலும், பா.ம.க இன்னும் ஒரு சாதிக் கட்சி வட்டத்திலிருந்து வெளியே வரவில்லை..
    அது அவர்களுடைய கல்வி மையம் பிரச்சனையின் போது இராமாதாசர் அளித்த பதில்களிலும் தொனிக்கும்..

மறுமொழி இடுக