ஆதிக்க சாதியினரின் அட்டகாசம்
பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பிரிவினை உண்டு பண்ணும் என்றால் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் சன்னதிகுள் நுழைய முடியும் என்ற நிலை பிரிவினைக்கு வழிவகுக்காதா?இது குறித்து ஆதிக்க சாதினர் எவரும் கேள்வி எழுப்புவது இல்லையே? ஏன்? ஆனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்று வரும் போது மட்டும் இவர்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும் எண்று கூச்சலிடுவார்கள். தகுதி உள்ளவர்க்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூப்பாடு போடுவர்கள்.
இட ஒதுக்கீடு என்றதும் கல்வி தரம் குறைந்து விடும் என்ற இவர்களின் வாதம் ஒரு விதண்டாவாதம் என்பதற்கு தமிழ் நாடு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு தகுதி ( மெரிட் ) அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஒப்பன் கோட்டாவில் ஆதிக்க சாதியினரை விட பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கப்பட்ட மாணவர்களே அதிகமாக தேர்ச்சி பெறுகின்றனர்
எனவே இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு கொண்டு வந்தால் ஆதிக்க சாதியினர் கர்ப்பக்கிரகத்திலேயே முடங்கி கிடக்க வேண்டியது தான். ஏனென்றால் இவர்களால் தகுதி அடிப்படையில் போட்டி போட்டு வெற்றி பெற முடியாது.
எனவே தமிழ்நாட்டில் உள்ளது போல் இந்தியா முழுவதும் இடஓதுக்கீடை கடைபிடிதால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களால் தமிழகம் போல் ஆதிக்க சாதியினரை விடநல்ல முறையில் படிக்க முடியும். இந்தியாவும் மேலை நாடுகள் போல முன்னேறிய நாடாகும்.

//எனவே இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு கொண்டு வந்தால் ஆதிக்க சாதியினர் கர்ப்பக்கிரகத்திலேயே முடங்கி கிடக்க வேண்டியது தான். //
Well Said.
//இன்று தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு தகுதி ( மெரிட் ) அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஒப்பன் கோட்டாவில் ஆதிக்க சாதியினரை விட பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கப்பட்ட மாணவர்களே அதிகமாக தேர்ச்சி பெறுகின்றனர்//
பின் ஏன் பிற்படுத்தபட்ட வகுப்பினர் 27% இட ஒதுக்கீடுக்காக போராட வேண்டும்????
இந்த 27%இட ஒதுக்கீடு அகில இந்திய அளவில் கிடைப்பதற்கு. கட்டுரையை முழுமையாக படிக்கவும்
இது அநீதி, டெல்லியில் பிற்ப்படுத்தபட்ட மக்களிடையே ஒரு விழிப்புணர்வு இல்லை.
கருத்துக்கு நன்றி..
//டெல்லியில் பிற்ப்படுத்தபட்ட மக்களிடையே ஒரு விழிப்புணர்வு இல்லை.//
எங்குமே இல்லை. ஒரு சிலர் தவிர…