
ஒரு இடத்தில் துவங்கிய கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை இந்தியா முழுவதும், அதுவும் இந்துத்துவம் அரசமைத்துக் கொண்டிருக்கும் எல்லா மாநிலங்களிலும் சட்டென பரவியிருக்கிறது. இது கிறிஸ்தவர்களின் மீது இந்துக்களின் குறிப்பாக அதன் பின்னணியில் இயங்கும் பார்ப்பனர்களின் எரிச்சலையே காட்டுகிறது.
லச்சுமணானந்தன் என்பவரைக் கிறிஸ்தவ அமைப்புகள் கொன்றுவிட்டதாகவும் அதற்குப் பழி வாங்கப் போவதாகவும் இந்து அமைப்புகள் சூழுரைப்பதும், வெட்ட வெளிச்சமாக சவால் விடுவதும் என இந்தியா இந்து வெறியர்களால் நிரம்பிய நாடு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன இந்துத்துவ வானரக் கூட்டங்கள்.
ஓட்டு பறி போய்விடக் கூடாதே எனும் கவலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் ! வெட்கம்.
ஒரிசாவில் மட்டுமே சுமார் 1200 ஆலயங்களை இடித்து சுமார் 100 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவப் பணியாளர்களைக் கொன்றிருக்கின்றனர் இந்த வெறியர்கள். இவை ஊடகங்களால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள உண்மை தெரியவரும் போது ஊடகத்தின் மீதான நம்பிக்க 100 சதவீதம் சரிந்து விடுகிறது.
http://orissaburning.blogspot.com எனும் வலைத்தளம் விவரிக்கும் சோகம் இந்த வெறிக்குப் பின்னால் நிற்கும் இந்துக்களின் மீதும் அவர்களுடைய பிம்பத்தின் மீதும் சேற்றையும், சாணியையும் வாரி இறைக்கிறது. இந்து பயங்கரவாதம் எத்துணை பெரிய கொடும் செயல்களையும் ரசித்துச் செய்கிறது என்பதும் அந்த நாட்டில் நாம் இருக்கிறோம் என்பதும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
Suffering prosecution என ஒரிசாக் கலவரத்தைக் குறித்த ஒரு உண்மை நிகழ்வுகளின் டாக்குமெண்டரி படம் ஒன்று கிறிஸ்தவ தலைவர்களின் மட்டத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இந்துக்கள் கும்பலாக ஆலயத்தில் நுழைகின்றனர், சிலுவையை உடைக்கின்றனர், அதில் காவித் துணியை சுற்றுகின்றனர். தாய்மதத்துக்குத் திரும்புவோம் என கோஷங்களை எழுப்புகின்றனர். பிரார்த்தனை செய்யும் மக்களைக் கொடுமைப்படுத்துகின்றனர், போதகர்களை ஆடைகளை அவித்து அவமானப்படுத்தி கொலையும் செய்கின்றனர்.
இஸ்லாமியர்களின் மீதான இந்துக்களின் வெறியை வெளிப்படுத்திய தெகல்கா போல கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதலை இந்தப் படம் வலியுடன் சொல்கிறது. இது கிறிஸ்தவ மக்களிடையே காண்பிக்கப்பட்டால் மிகப்பெரிய கொந்தளிப்பு நாடு முழுவதும் ஏற்படும் என கிறிஸ்தவ உயர் அமைப்புகள் இதை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றன. வெறிக்கும் நெறிக்கும் இடையேயான வேற்றுமை அவர்களுடைய அணுகுமுறையில் வெளிப்படுகிறது.
இந்தியாவில் நிகழும் வன்முறை உலக நாடுகளின் கண்டனத்தைப் பெற்ற அளவுக்கு உள்ளூர் தலைவர்களின் கண்டனத்தையோ, தடையையோ பெறவில்லை. பல இடங்களில் காவல்துறையின் உதவியுடனே அனைத்தும் நிகழ்ந்தேறுவதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசும், மதச்சார்பின்மையை விரும்பும் மக்களும், உண்மையான அரசியல் கலக்காத ஆன்மீகவாதிகளும் இதில் ஆர்வம் காட்டவில்லையேல், வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை என எழுதுவதைப் போல, இந்து வெறியர்கள் ஜாக்கிரதை என இந்தியாவின் நுழை வாயில்களில் எழுதவேண்டியது தான்.










அண்மைய மறுமொழிகள்